Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு  மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்
, ஞாயிறு, 8 ஜனவரி 2023 (14:03 IST)
கிழக்குத் திசை காற்றின் வேக மறுபாடு காரணமாகத் தமிழ் நாட்டில் கடலோர மாவட்டங்களிலும் அதனை ஒட்டிய பகுதிகளில் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாள்களாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது இன்று, காற்று சுழற்சி காரணமாக சென்னை உள்பட ஏழு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், கிழக்குத் திசை காற்றின் வேக மறுபாடு காரணமாகத் தமிழ் நாட்டில் கடலோர மாவட்டங்களிலும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் , புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்றும், நாளையும்,   லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும்,10 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை தமிழ் நாடு, புதுவையில் வறண்ட வானிலை  நிலவும் எனத் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரெட் ஜெய்ண்ட் பற்றிப் பேசலாமே?கூட்டணி தர்மம் தடுக்கிறதோ? திருமாவுக்கு பிஸ்மி கேள்வி