இன்று இரவுக்குள் 17 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

Prasanth Karthick
செவ்வாய், 16 ஜூலை 2024 (16:54 IST)

தமிழ்நாட்டில் நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் 17 மாவட்டங்களில் மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வந்த நிலையில், தற்போது காற்றின் திசைமாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் அதிகனமழை வரை பெய்யத் தொடங்கியுள்ளது. இன்று நீலகிரியில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 17 மாவட்டங்களில் இன்று இரவுக்குள் ஆங்காங்கே மழை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், தேனி, தென்காசி விருதுநகர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலும், காரைக்கால், புதுச்சேரியின் சில பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை.. இன்று மீண்டும் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

நவம்பர், டிசம்பரில் வலுவான புயல்கள் உருவாக வாய்ப்பு! - சுயாதீன வானிலை ஆய்வாலர் டெல்டா வெதர்மேன் கணிப்பு!

15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. நீதிமன்ற விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே குழந்தை பெற்றதால் அதிர்ச்சி..!

எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பயனில்லை.. டிஜிட்டல் அரேஸ்ட்டில் ரூ.50 லட்சம் ஏமாந்த முதிய தம்பதி..!

சூடானில் உள்நாட்டு போர் தீவிரம்.. ராணுவமே சொந்த நாட்டு மக்கள் 460 பேரை கொன்ற கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments