Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

Rain

Prasanth Karthick

, வெள்ளி, 12 ஜூலை 2024 (14:41 IST)

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மழை தொடர்ந்து வரும் நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தொடங்கி நடந்து வரும் நிலையில் அரபிக்கடலோர மாநிலங்கள், வட மாநிலங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டிலும் பல மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக ஆங்காங்கே மிதமானது முதல் கனமழை வரையிலும் பெய்து வருகிறது.

அந்த வகையில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் தமிழ்நாட்டின் 13 மாவட்டங்களில் மழைப்பொழிவிற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 

அதன்படி, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, கரூர், திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவை, திருப்பூர், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'இந்தியன் 2' ரிலீஸை கொண்டாட 5 கிலோ கற்பூரம் கொளுத்திய ரசிகர்கள்.. நடந்த விபரீதம்..!