Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.. குடையுடன் வெளியே செல்லுங்க..!

Advertiesment
வானிலை

Siva

, செவ்வாய், 9 செப்டம்பர் 2025 (08:35 IST)
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, மற்றும் தேனி ஆகிய 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. 
 
இன்று காலை 10 மணி வரை இந்த மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் குடையுடன் செல்லவும்.
 
மேலும், காரைக்கால் பகுதியிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இந்த மழைப்பொழிவு, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரங்களுக்கு நன்மை பயக்கும் என விவசாயிகள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. 
 
இந்த திடீர் மழை, கடும் வெப்பத்தில் இருந்து மக்களுக்கு சிறிது நிவாரணம் அளிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெல்லியில் அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு: மன நிம்மதிக்காக போவதாக சொன்னாரே?