Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

Siva
ஞாயிறு, 16 ஜூன் 2024 (11:32 IST)
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருவள்ளூருக்கு செல்லும் மின்சார ரயில் வரும் ஜூன் 19, 20 ஆகிய இரண்டு நாட்கள் ரத்து செய்யப்படுகிறது என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. 
 
சென்னை சென்ட்ரல் – திருவள்ளூர் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால்  ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
 
திருவள்ளூர் பணிமனையில் ஜூன் 19, 20 ஆகிய தேதிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ளவுள்ளதால் அதிகாலை இயக்கப்படும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில், சென்னை சென்ட்ரலில் அதிகாலை 4.30 மணிக்கு புறப்படும் மின்சார ரயிலும், மறுமார்க்கமாக திருவள்ளூரில் இருந்து அதிகாலை 3.50 மணிக்கு புறப்படும் மின்சார ரயிலும் ஜூன் 19, 20 தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தி தேசிய மொழி தான் என்பதில் சந்தேகமில்லை.. ஆனால்.. ஜெகந்நாதன் ரெட்டி பரபரப்பு கருத்து..!

மனைவியால் கொடுமைப்படுத்தப்பட்ட கணவனுக்கு விவாகரத்து: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த நபர் வெட்டி கொலை.. சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

சரோஜா தேவி மரணத்தை சித்தராமையா மரணம் என தவறாக மொழி பெயர்த்த மெட்டா.. கடும் கண்டனம்..!

அரசு ஊழியர்கள் அரை மணி நேரம் தாமதமாக வரலாம்: அரசே கொடுத்த அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments