Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த விவகாரம்.. மன்னிப்பு கோரிய மத்திய அமைச்சர்..!

Shoba

Mahendran

, செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (18:19 IST)
பெங்களூரு ராமேஸ்வரம் காஃபே குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த விவகாரத்தில்  மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே மன்னிப்பு கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் ஷோபா கரந்தலஜே
சென்னை உயர்நீதிமன்றத்தில், மன்னிப்பு கேட்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
 
முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன் பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே ஹோட்டலில் திடீரென வெடித்த வெடிகுண்டு காரணமாக 10 பேர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்  வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் அந்த ஓட்டலில் சாப்பிட்டு விட்டு, தான் கொண்டு வந்த பையை அங்கேயே வைத்துவிட்டு சென்றதாகவும்,  அந்த பைக்கில் இருந்த  வெடிகுண்டுகள் வெடித்ததாகவும் விசாரணையில் தெரிய வந்தது
 
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இருந்து வந்தவர் தான் பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேயில் குண்டு வைத்துவிட்டு சென்றுவிட்டார் என்று மத்திய இணை அமைச்சர்  ஷோபா கரந்தலஜே பேசியது  சர்ச்சையான நிலையில் அவரது பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கில் தான் தற்போது மத்திய அமைசர் ஷோபா மன்னிப்பு கோரியுள்ளார்,.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அனைத்து இடங்களிலும் போதைப் பொருட்கள்.. காவல் துறைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி