Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபாகரன் எங்க இருக்கார்? – பழ.நெடுமாறனிடம் உளவுத்துறை விசாரணை!

Webdunia
செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (11:56 IST)
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பழ.நெடுமாறன் சொன்ன நிலையில் அவரிடம் உளவுத்துறை விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கையில் தமிழ் ஈழ போரில் ஈடுபட்ட விடுதலை புலிகள் அமைப்பின் தலைவராக இருந்தவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். இலங்கையில் நடந்த போரில் கடந்த 2009ம் தேதி இவர் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. ஆனாலும் அவர் உயிருடன் இருப்பதாக அரசல்புரசலாக பேச்சு நிலவி வந்தது.

இந்நிலையில் தற்போது தமிழ் தேசியவாதி பழ.நெடுமாறன், பிரபாகரன் உயிருடன் உள்ளதாகவும், விரைவில் அவர் தன்னை வெளிப்படுத்திக் கொள்வார் என்றும் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இலங்கை ராணுவம் அவர் இறந்து விட்டதாக உறுதியாக கூறி வருகிறது.



எனினும் இந்த விஷயத்தை முழுமையாக அலட்சியப்படுத்திவிட முடியாது என்பதால் பிரபாகரன் குறித்த தகவல்களை மீண்டும் திரட்ட மத்திய உளவு பிரிவினர் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி தமிழ்நாடு க்யூ பிரிவு போலீஸார் மீண்டும் விசாரணையில் இறங்கியுள்ளனர்.

மேலும் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் பேசியது குறித்து அவரிடமும், அவரது ஆதரவாளர்களிடமும் விசாரணை நடத்த உளவு பிரிவினர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பல ஆண்டுகள் கழித்து மீண்டும் பிரபாகரன் பெயர் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments