Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜயின் பிரச்சார வாகனம் கூட்டத்திற்குள் சென்றதுதான் காரணமா?!.. சிபிஐ சந்தேகம்!...

Advertiesment
vijay
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 27ம் தேதி மாதம் தவெக தலைவர் விஜய் கரூருக்கு சென்றபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. விஜய் இதுவரை 3 முறை டெல்லிக்கு சென்று சிபிஐ விசாரணையில் கலந்துகொண்டார்.

இந்நிலையில்தான், கரூரில் விஜய் பேசிக்கொண்டிருந்தபோது ட்ரோன் மூலம் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை விஜய் தரப்பு அழிக்க முயன்றதாகவும், அதை சிபிஐ மீட்டிருப்பதாகவும் திமுகவின் சொல்லி வருகிறார்கள். இது உண்மையா என்பது தெரியவில்லை.

ஒருபக்கம், கரூருக்கு விஜய் சென்ற போது அனுமதிக்கப்பட்ட எல்லையைத் தாண்டி விஜய்யின் வாகனம் கூட்டத்திற்குள் நுழைந்ததே துயர சம்பவத்திற்கு காரணம் என சிபிஐ சந்தேகிப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது, குறிப்பிட்ட இலக்கை விட 20 மீட்டர் தூரம் கூடுதலாக வாகனம் முன்னேறிச் சென்றதாக விசாரணையில் தெரியவந்திருப்பதாக கூறுகிறார்கள்.

கடந்த முறை விஜய் டெல்லி சென்றபோது அவரிடம் சிபிஐ அதிகாரிகள் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது, கரூரில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏற்பட்ட குளறுபடிகள் பற்றி விஜய்யிடம் கேள்விகள் எழுப்பப்பட்டதாக சொல்லப்படுகிறது.

ஏற்கனவே, உரிய வழியில் செல்லாமல் வாகனம் மாறியதே கூட்ட நெரிசலை தூண்டிவிட்டதாகத் தமிழக காவல்துறை ஏற்கனவே சிபிஐ-யிடம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட்.. நாளை வரை கெடு?