கரூர் துயர சம்பவ விவகாரம்: புஸ்ஸி ஆனந்துக்கு சிபிஐ அனுப்பிய சம்மன்.. தீவிர விசாரணை..!

Siva
திங்கள், 27 அக்டோபர் 2025 (10:03 IST)
கரூரில் நடந்த துயர சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை செய்து வரும் நிலையில் தற்போது தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்திய போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கின் விசாரணை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, தற்போது கரூரில் சி.பி.ஐ. அலுவலகம் ஏற்படுத்தப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
 
இந்த நிலையில், கரூர் சி.பி.ஐ. அலுவலகத்தில் விளக்கம் அளிக்க பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி உள்ளது. இவர்கள் இருவரிடமும் கரூர் துயர சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சேலம் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. பழிவாங்க சிறுமியின் நண்பர் செய்த திடுக்கிடும் செயல்..!

2 ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை.. பாஜக அமைச்சரின் சர்ச்சை கருத்து..!

பிரிட்டனில் 20 வயது இந்திய இளம்பெண் பாலியல் பலாத்காரம்.. மன உளைச்சலால் தெருவில் அமர்ந்த கொடுமை..!

இன்று 13 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக்கடலில் உருவானது 'மோந்தா' புயல்: சென்னையை நோக்கி வருகிறதா? 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments