Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதிபதி ஆறுமுகசாமி அறிக்கை குறித்து சிபிஐ விசாரணை தேவை: டிடிவி தினகரன்

Webdunia
திங்கள், 24 அக்டோபர் 2022 (16:49 IST)
நீதிபதி ஆறுமுகசாமி அறிக்கை குறித்து சிபிஐ விசாரணை தேவை என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை செய்த நீதிபதி ஆறுமுகசாமி அறிக்கை சமீபத்தில் வெளியானது. இந்த அறிக்கை அரசியல்வாதியின் அறிக்கை போல் இருக்கிறது என்றும் இந்த அறிக்கையை குப்பைத் தொட்டியில் தான் போட வேண்டும் என்றும் பல ஊடகங்கள் தலைப்புச் செய்திகளாக வெளியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் நீதிபதி ஆறுமுகசாமி அறிக்கை உள்நோக்கம் கொண்டது என்றும் அவரை எப்படி அந்த அறிக்கையை தயாரித்தார் என்பது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறினார் 
 
அப்பல்லோ மருத்துவர்கள், எய்ம்ஸ் மருத்துவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மீது வீண்பழி சுமத்தி உள்ளார் என்றும் அவர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார் மற்றபடி
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசாங்க திட்ட விளம்பரத்தில் உங்கள் பெயர் எதற்கு? - ‘உங்களுடன் ஸ்டாலின்’ குறித்து நீதிமன்றம் கேள்வி!

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

ஓபிஎஸ், பிரேமலதாவை அடுத்து முதல்வரை சந்திக்கிறாரா ராமதாஸ்.. விரிவாகி வரும் திமுக கூட்டணி?

பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்து.. அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி! - நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்!

மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைவு.. இன்னும் குறைய வாய்ப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments