Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதிபதி ஆறுமுகசாமி அறிக்கை குறித்து சிபிஐ விசாரணை தேவை: டிடிவி தினகரன்

Webdunia
திங்கள், 24 அக்டோபர் 2022 (16:49 IST)
நீதிபதி ஆறுமுகசாமி அறிக்கை குறித்து சிபிஐ விசாரணை தேவை என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை செய்த நீதிபதி ஆறுமுகசாமி அறிக்கை சமீபத்தில் வெளியானது. இந்த அறிக்கை அரசியல்வாதியின் அறிக்கை போல் இருக்கிறது என்றும் இந்த அறிக்கையை குப்பைத் தொட்டியில் தான் போட வேண்டும் என்றும் பல ஊடகங்கள் தலைப்புச் செய்திகளாக வெளியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் நீதிபதி ஆறுமுகசாமி அறிக்கை உள்நோக்கம் கொண்டது என்றும் அவரை எப்படி அந்த அறிக்கையை தயாரித்தார் என்பது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறினார் 
 
அப்பல்லோ மருத்துவர்கள், எய்ம்ஸ் மருத்துவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மீது வீண்பழி சுமத்தி உள்ளார் என்றும் அவர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார் மற்றபடி
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments