Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரி விவகாரம்; தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்

Webdunia
செவ்வாய், 3 ஏப்ரல் 2018 (11:00 IST)
காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் மனுவை ஏற்கக் கூடாது என வலியுறுத்திய தமிழகத்தின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
உச்ச நீதிமன்றம் கெடு விதித்தும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. இதனையடுத்து தமிழக அரசு, மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடந்தது. கர்நாடகாவில் சட்ட பேரவைத் தேர்தல் நடைபெறப் போவதால், காவிரி மேலாண்மை வாரிய அமைக்க 3 மாத கால அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. 
 
இந்நிலையில் தமிழக அரசின் மனு விசாரணை வரும் 9 ஆம் தேதி நடைபெறும் என உச்ச நீதிமன்றம் நேற்று தெரிவித்திருந்தது. மத்திய அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளக்கூடாது என தமிழக அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால் தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், தற்பொழுது மத்திய அரசின் மனுவை ஏற்றுக் கொண்டது. அந்த மனு மீதான விசாரணை தமிழக அரசின் மனுவோடு சேர்த்து வரும் 9 ஆம் தேதியன்று விசாரிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு மருத்துவமனைக்கு 300 லிட்டர் தாய்ப்பால் வழங்கிய திருச்சி பெண்.. சாதனை புத்தகத்தில் இடம்..!

பீகார் மக்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை தவறில்லை: டிடிவி தினகரன்

8 மாவட்டங்களை வெளுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

தொடர் ஏற்றத்தில் தங்கம், வெள்ளி விலை.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து வெளியேற்றம்.. இந்திய பங்குச்சந்தை மீண்டும் சரிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments