Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு.! மத்திய அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்..!!

Advertiesment
MK Stalin

Senthil Velan

, திங்கள், 29 ஜூலை 2024 (21:18 IST)
நாம் செய்ய வேண்டிய பணிகள் பல உள்ளன என்றாலும், உடனடியாகச் செய்தாக வேண்டியது, ஒன்றிய அரசு சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்துவதை உறுதி செய்வதுதான் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “திமுக மேற்கொண்ட சமரசமற்ற சட்டப் போராட்டத்தினால், கடந்த 3 கல்வி ஆண்டுகளில் 15,066 மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்குக் கிடைத்துள்ள செய்தியைப் பகிர்கையில் எனது நெஞ்சில் பெருமை பொங்குகிறது. 
 
மேலும், இந்தச் சாதனையின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டி, இந்தியாவெங்கும் ஓபிசி இடஒதுக்கீடு குறித்த பல பயனுள்ள விவாதங்களுக்கு வழிவகுத்ததில் அகில இந்திய சமூக நீதிக் கூட்டமைப்பு பெரும் பங்காற்றியுள்ளது.  நாம் செய்ய வேண்டிய பணிகள் பல உள்ளன என்றாலும், உடனடியாகச் செய்தாக வேண்டியது ஒன்றிய அரசு சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்துவதை உறுதிசெய்வதுதான். 

 
அப்போதுதான் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் விகிதத்தை அறிந்து, சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் நமது பங்கைப் பெற முடியும். இதனைச் சாதிக்க ஒன்றிணைந்து பணியாற்றிடுவோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் எப்போது.? முக்கிய தகவலை கேட்டது தேர்தல் ஆணையம்..!!