Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்- அன்புமணி ராமதாஸ்

Webdunia
வியாழன், 26 அக்டோபர் 2023 (14:03 IST)
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என 44 ஆண்டுகளாக பாமக நிறுவனம் ராமதாஸ் போராடி வருவதாக அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஸ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடந்து வரும் நிலையில், இம்மா நிலத்தில் சமீபத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதையடுத்து, மற்ற மாநிலங்களிலும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென பலரும் கூறி வருகின்றனர்.

இந்த  நிலையில், தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என 44 ஆண்டுகளாக பாமக நிறுவனம் ராமதாஸ் போராடி வருவதாக  பாமக தலைவரும் எம்பியுமான அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் கூறியுள்ளதாவது:

''அனைத்து சமுதாய மக்களின் நிலையை அறிய சாதிவாரி கணக்கெடுப்பு அவசியமாகும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுக்கும் ஆசியாளர்கள் சமூக நீதி பற்றி  பேசுவது ஏன்? மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் அனைத்து சாதியினரின் சமுதாய நிலையை அறியமுடியும். ஒட்டுமொத்த தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு இது அவசியம்'' என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் கொட்டி தீர்த்த கனமழை.. விமான நிலைய மேற்கூரை சரிந்து ஒருவர் பலி.. 6 பேர் படுகாயம்

அரசு தலைமை மருத்துவமனையில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

ஜெயலலிதா இறந்த போது அதை விசாரிக்க எடப்பாடி பழனிச்சாமி நியமித்த ஒரு நபர் கமிஷன் போல தற்போது முதல்வர் நியமித்திருக்கும் ஒரு நபர் விசாரணை குழு நடந்து கொள்ளாது - கீ.வீரமணி

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 2ஆம் இடம் கிடைக்குமா? சீமான் பக்கா பிளான்..!

வலது பக்கம் ப்ரியாவுக்கு, இடது பக்கம் ஹரிதாவுக்கு..! – இதயத்தை பிரித்த மாணவனுக்கு ஆசிரியர் வைத்த ட்விஸ்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments