Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் விஜய் தந்தை மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவு!

Webdunia
சனி, 16 டிசம்பர் 2017 (13:34 IST)
நடிகர் விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கடந்த நவம்பர் மாதம் கூறியிருந்த கருத்து ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதனால் அவர் மீதான புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த சென்னை மாநகர காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற விசிறி திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட விஜய்-இன் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர், மக்கள் திருப்பதி கோவிலுக்கு காணிக்கை செலுத்துவதை கடவுளுக்கு லஞ்சம் கொடுப்பது என கூறியிருந்தார்.
 
அவரது இந்த கருத்து இந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்துவதாகவும், இரு மதங்களுக்கிடையே விரோதத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக இந்து முன்னனியினர் கூறினார். எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என இந்து முன்னனி நிர்வாகி வி.ஜி.நாராயணன் நவம்பர் 25-ஆம் தேதி சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.
 
ஆனால் புகாரை பெற்றுக்கொண்ட காவல் ஆணையர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்குபதிவு செய்ய உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் இந்து முன்னனி நிர்வாகி நாராயணன்.
 
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகாரில் முகாந்திரம் இருந்தால் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments