10 மணி வரை பிரச்சாரம்... சீமான் அண்ட் கோ மீது வழக்குபதிவு!

Webdunia
திங்கள், 22 மார்ச் 2021 (13:33 IST)
சீமான் தேர்தல் விதிமுறைகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்ததாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 

 
தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று இரவு விருதுநகரில் பிரசாரம் செய்தார்.
 
அப்போது அவர் தேர்தல் விதிமுறைகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்ததாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆம், சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் செல்வகுமார் (விருதுநகர்), ஆனந்த ஜோதி (திருச்சுழி), பிரியா (சிவகாசி), ஜெயராஜ் (ராஜபாளையம்), பாண்டி (சாத்தூர்), அபிநயா (ஸ்ரீவில்லிபுத்தூர்), உமா அடைக்கலம் (அருப்புக்கோட்டை) ஆகிய 7 தொகுதி வேட்பாளர்கள் உள்பட கட்சியினர் 450 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்கள் பாகிஸ்தானை நம்ப தயாராக இல்லை.. இஸ்ரேல் தூதர் அதிரடி அறிவிப்பு..!

ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்த 250 நாய்கள்.. உண்மையா? ஏஐ புகைப்படமா?

230 எண்ணெய் கப்பல்கள் வெயிட்டிங்!.. ஹோர்மூஸ் நீரிணையை திறக்குமா ஈரான்?....

புதுச்சேரி, கேரளா, அசாமில் சட்டமன்ற தேர்தல் நிறைவு!.. பதிவான வாக்குகள் எவ்வளவு?..,

10 பெட்டாபைட் அளவிலான ராணுவ ரகசியங்களை திருடிய ஹேக்கர்கள்.. அனைத்தும் கிரிப்டோகரன்சிக்கு விற்பனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments