Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகாரத்தை வைத்து ஆட்டத்தை கலைப்பாரா ஓபிஎஸ்? மகனின் வெற்றிக்கு எதிராக வழக்கு!

Webdunia
செவ்வாய், 9 ஜூலை 2019 (10:37 IST)
ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் வாக்காளர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். 
 
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் தேனி தொகுதியில் போட்டியிட்ட ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் இவர்தான். 
 
இந்நிலையில் இவரது வெற்றி செல்லாது என ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றிக்கு எதிராக தேனியை சேர்ந்த வாக்காளர் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு குறித்து அந்த வாக்காளரின் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 
 
நடந்து முடிந்த மக்களவை தேர்தல் தேனி தொகுதியில் அதிமுக சார்பில் ரவீந்திரநாத் குமார் போட்டியிட்டார். இவர் தொகுதியில் வாக்காளர்களுக்கு அதிக பணப்பட்டுவாடா செய்தார். இது தொடர்பான வீடியோ ஆதாரங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. 
இதேபோன்ற புகார் வேலூர் தொகுதிக்கு வந்தபோது தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்தது. ஆனால், தேனி தொகுதியில் அதிக அளவில் புகார் வந்தபோதும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காதது ஏன்?  
 
அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் முறைகேடு செய்து வெற்றி பெற்றுள்ளார். எனவே இவரின் வெற்றி செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ள நிலையில், ஓபிஎஸ் தனது அதிகாரத்தை பயன்படுத்தி இந்த வழக்கை ஒன்றுமில்லாமல் செய்துவிடுவார் என தேனி நெருங்கிய வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments