Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்சி நிகழ்ச்சியில் விதி மீறியதால் நடிகை குஷ்பு மீது வழக்கு பதிவு

Webdunia
சனி, 3 பிப்ரவரி 2018 (15:12 IST)
நெல்லையில் நடந்த காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சியில் நடிகை குஷ்பு இரவு 10 மணியை கடந்த பிறகும் கூட்டத்தில் பேசியதால் குஷ்பு உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் முக்கூடலில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில், அக்கட்சியின் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர்  நடிகை குஷ்பு கலந்து கொண்டார். போலீஸார்  இரவு 10 மணி வரை மட்டுமே நிகழ்ச்சி நடத்த அனுமதி கொடுத்தனர். 
 
ஆனால் குஷ்பு இரவு 10 மணியை கடந்த பிறகும் கூட்டத்தில் பேசினார்.  போலீசார் உடனடியாக கூட்டத்தை முடிக்க சொல்லி  வலியுறுத்திய போதிலும் குஷ்பு இரவு 10.30 மணியை கடந்த பிறகுதான் தனது பேச்சை முடித்தார். இதனையடுத்து முக்கூடல் போலீசார் குஷ்பு உள்பட 10 பேர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கப்பலை எடுக்குறீங்களா? ஏவுகணைய விடவா? - அமெரிக்காவை மிரட்டும் வடகொரியா?

2026ல் தவெக ஆட்சி அமைக்கும் என்பது விஜய்யின் பகல் கனவு: ஜெயகுமார்

16 மாத குழந்தையின் உடல் உறுப்பு தானம்.. புத்துயிர் பெற்ற 2 பேர்..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. மீளவே முடியாத முதலீட்டாளர்கள்..!

இறங்கிய வேகத்தில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.64000க்கும் மேல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments