Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராட் கோலி, தமன்னாவை கைது செய்ய வேண்டும்! – உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

Webdunia
வெள்ளி, 31 ஜூலை 2020 (12:47 IST)
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை ஆதரித்து விளம்பரம் செய்ததற்காக நடிகை தமன்னா மற்றும் கிரிக்கெட் வீரர் விராட் கோலியை கைது செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சமீப காலமாக ஆன்லைன் மோசடி விளையாட்டுகளால் மக்கல் பலர் ஏமாற்றப்படுவதும், பலர் விரக்தியில் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவமும் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் சென்னையை சேர்ந்த கல்லூரி இளைஞர் ஒருவர் இதுபோன்ற ஆன்லைன் விளையாட்டு ஒன்றில் பணம் முழுவதையும் இழந்ததாலும் விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுக்க தொடங்கியுள்ளது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ள வழக்கறிஞர் சூர்யப்ரகாஷ் சூதாட்ட விளையாட்டுகளை ஊக்குவிக்கும் விதமாக அந்த விளம்பரங்களில் நடித்த இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் நடிகை தமன்னா ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதை அவசர வழக்காக ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிமன்றம் இந்த மனுவின் மீதான விசாரணையை ஆகஸ்டு 4ம் தேதி நடத்துவதாக தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments