Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காலேஜ் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆதாரத்துடன் சிக்கிய கார் டிரைவர்!

காலேஜ் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆதாரத்துடன் சிக்கிய கார் டிரைவர்!
, சனி, 16 மார்ச் 2019 (15:22 IST)
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் இளம் பெண்களுக்கு நடந்த கொடுமைகளுக்கே இன்னும் முடிவு கிடைக்காத நிலையில் அடுத்து நாகையில் இது போன்ற ஒரு கொடுமை நடந்துள்ளது அம்பளமாகியுள்ளது. 
 
நாகையை சேர்ந்த கார் டிரைவர் சுந்தர் என்பவன் கல்லூரி பெண்களிடம் ஆசை வார்த்தை பேசி காதல் வலையில் விழ வைத்து பின்னர் பாலியல் அத்துமீறல்களில் ஈடுப்பட்டுள்ளான். சுந்தரின் உண்மையான முகத்தை தெரிந்துக்கொண்ட பெண் ஒருவர் அவன் மீது போலீஸில் புகார் அளித்துள்ளார். 
 
இதன்பின்னர் விசாரனை மேற்கொண்ட போலீஸார் சுந்தரை கைது செய்துள்ளனர். சுந்தர் இது போன்று பல கல்லூரி மாணவிகளை  காதலிப்பதாக கூறி ஏமாற்றி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. 
 
மேலும், சுந்தரிடம் இருந்து பல பெண்களின் ஆபாச புகைப்படங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சுந்தர் பெண்களுடன் இருக்கும் நெருக்கானமான புகைப்படங்கலும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

8 ஜிபி டேட்டா இலவசமா வேணுமா..? இருக்கே ஜியோவின் செலபிரேஷன் பேக்