ஆட்சி இருக்கிறது என்பதால் யாரையும் மிரட்டி விடலாமா? திமுகவுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

Siva
வியாழன், 3 ஜூலை 2025 (18:25 IST)
ஆட்சி இருக்கிறது என்பதால் யாரையும் மிரட்டி விடலாம் என எண்ணும் தி.மு.க.,-வினருக்கு கடும் கண்டனம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
 
அ.தி.மு.க., தொழில்நுட்ப பிரிவு செயலாளர் செல்வானந்தம் மரணத்திற்கு, தி.மு.க.,வினர் கொடுத்த சித்திரவதை தான் காரணம் என்று கட்சியின் பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
திருப்பூர் மாவட்டம் குண்டடம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., தொழில்நுட்பபிரிவு செயலாளர், எம். செல்வானந்தம் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், கழகத்தினருக்கும் அ.தி.மு.க., சார்பில் சார்பில் ஆழ்ந்த இரங்கல்.
 
பணம் கொடுக்கல் வாங்கலில் மதுரை மண்டல தி.மு.க., பொறுப்பாளர் , மதுரை தெற்கு மாவட்ட மீனவரணி அமைப்பாளர், தாராபுரம் தி.மு.க., மேற்கு ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட தி.மு.க.,-வினர் கொடுத்த சித்ரவதை தான் செல்வானந்தம் தன் உயிரை மாய்த்துக்கொள்ள காரணம் என தகவல்கள் வருகின்றன.
 
ஆட்சி இருக்கிறது என்பதால் யாரையும் மிரட்டி விடலாம் என எண்ணும் தி.மு.க.,-வினருக்கு கடும் கண்டனம். செல்வானந்தம் மரணத்திற்கு காரணமான திமுகவினர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க.,அரசை வலியுறுத்துகிறேன்.
 
இவ்வாறு இ.பி.எஸ்., அறிக்கையில் கூறியுள்ளார்.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments