Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மது விற்பனையை ஆன்லைனில் மேற்கொள்ள முடியாது – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்!!

Webdunia
புதன், 6 மே 2020 (16:07 IST)
தமிழத்திலும் சென்னை தவிர பிற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் நாளை முதல் திறக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதோடு அரசு மாதுபானங்களின் விலையை ரூ.20 உயர்த்தியுள்ளது. சாதாரண 180 மிலி மதுபானங்கள் அடக்க விலையோடு ரூ.10 அதிகமாகவும், நடுத்தர மற்றும் ப்ரீமியம் பானங்கள் ரூ.20 அதிகமாகவும் விற்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தற்போது டாஸ்மாகில் மது வாங்க வயது வாரியாக நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில்,, டாஸ்மாக் மது விற்பனையை ஆன்லைனில் மேற்கொள்ள முடியாது என சென்னை உயர் நீதி மன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து , உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவித்துள்ளதாவது :

தமிழகத்தில் கொரோனாவைரஸ் தாக்கம் முடிய நாளாகும் என்பதால் மற்ற கடைகளை போல மதுக்கடைகளும் திறக்கப்படுகிறது.

மதுக்கடைகளில் சமூக விலகல் பின்பற்றப்படும். அதேசமயம் மக்களுக்குப் பாதுகாப்பும் வழங்கப்படும் .மது மொத்த விற்பனை செய்யப்படாது. தனிநபர்களுக்கு மட்டும் தான் விற்கப்படும் என தெரிவித்துள்ளது.

மேலும், டாஸ்மாக் கடைகளை திறக்க தடை கோரி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள  மனுக்கள் மீது இன்று மாலை 5 மணிக்கு தீர்ப்பு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

11, 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு மட்டும் முக்கிய தடுப்பூசி.. அரசின் அதிரடி முடிவு..!

பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதிகள்யின் முதல் புகைப்படம்.. பரபரப்பு தகவல்..!

நிமிஷாவின் மரண தண்டனை ரத்து செய்யப்படவில்லை: கொலையான மஹ்தியின் சகோதரர் கருத்து..!

சதுரகிரி மலைப்பகுதியில் திடீரென பரவும் காட்டுத்தீ- பக்தர்கள் செல்ல தடை

எங்கள் கூட்டணியில் பாஜக.. பாஜக கூட்டணியில் சில கட்சிகள்.. எடப்பாடி பழனிசாமி விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments