Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குடிக்கலைன்னா ஓட்டு போட முடியாது ! கை நடுக்கம் வரும் - குடிகாரரின் கோரிக்கை

குடிக்கலைன்னா ஓட்டு போட முடியாது ! கை நடுக்கம் வரும்  - குடிகாரரின் கோரிக்கை
, செவ்வாய், 16 ஏப்ரல் 2019 (16:10 IST)
அனைத்து கட்சிகளும் தீவிரமாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று மாலையுடன் பிரசாரம் முடிவடைகிறது. தேர்தலை முன்னிட்டு இன்று முதல் (16,17,18 ) முன்று நாட்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மார்க் கடைகள் மூடப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில்  ஒரு நபர் தேர்தலுக்கு மதுபானக் கடைகள்  மூடுவதால் கைநடுக்கம் வரும் என்று பேசி பேஸ்புக் பக்கத்தில்  ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
 
அதில் அவர் கூறியுள்ளதாவது :
 
’’நீங்க எலக்சனுக்கு மூனு நாள் மதுபானக் கடையை லீவு விடறீங்க.. மதுபானக் கடைக்கும் , எலெக்சனுக்கும் என்ன சம்பந்தம் ? நான் எலக்சன் அதிகாரிய பாத்துக் கேட்கறேன: எனக்குக் குடிக்கைலன்னா கையில் நடுக்கம் வரும். தேர்தல் அப்ப படபடன்னு எதாவது மாத்தி பண்ணீருவேன், அதனால் தேர்தல்ல ஓட்டு மாத்தி போட்டுறுவோம்.  நாங்க நெனச்சவங்களுக்கு ஓட்டு போட  முடியாது. இது என்ன மாதிரி உள்ள குடிகாரங்க சங்கம் சார்பா கேட்கறேன் ’’என்று அவர் கூறியுள்ளார்.
 
இந்த வீடியோ  சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
 

நன்றி சங்கர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ.5,290க்கு ஸ்மார்ட்போன்: பட்ஜெட் ரேஞ்சுக்கு இறங்கிய சாம்சங்!