பிளஸ் 2 தேர்வு: முதல்முறையாக மாணவர்களுக்கு கால்குலேட்டர் அனுமதி..!

Mahendran
செவ்வாய், 4 நவம்பர் 2025 (11:53 IST)
மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடைபெறும் பிளஸ் 2 பொதுத் தேர்வில், கணக்குப்பதிவியல் (Accountancy) பாடத்துக்கு தேர்வு அறையில் முதல் முறையாக கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார். மாணவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.
 
சென்னை தலைமை செயலகத்தில் இன்று பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ், இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
 
பிளஸ் 2 பொதுத் தேர்வில் கணக்குப்பதிவியல் பாடம் எழுதும் மாணவர்கள், கணக்கீடுகளை செய்ய முதன்முறையாக கால்குலேட்டரை பயன்படுத்த அனுமதிக்கப்படுவர். இது இப்பாட மாணவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
 
"மாணவர்கள் பொதுத்தேர்வை அச்சமின்றி எழுத வேண்டும். இது மாணவர்களுக்கான தேர்வு மட்டுமல்ல, ஆசிரியர்களுக்கான தேர்வும் கூட. மகிழ்ச்சியாக தேர்வுக்கு தயாராகுங்கள்," என்று அவர் அறிவுறுத்தினார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

SIR-க்கு பின் ஓட்டு இல்லாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?!... வாங்க பார்ப்போம்..

ஓசூரில் காவேரி கூக்குரல் சார்பில் ‘ஒரு முறை நடவு, ஆயுள் முழுவதும் வரவு’ கருத்தரங்கு: மத்திய வேளாண்துறை அமைச்சர் பங்கேற்பு..!

வெள்ளை மாளிகையில் டிரம்ப் வைத்த கிறிஸ்துமஸ் விருந்து.. ’தசாவதாரம் பட நடிகை பங்கேற்பு..!

சென்னை வரைவு வாக்காளர் பட்டியல்.. கொளத்தூரில் 1 லட்சம்.. சேப்பாக்கத்தில் 89 ஆயிரம் பெயர்கள் நீக்கம்..!

வங்கதேசம் போல் தான் மேற்குவங்கமும் உள்ளது.. சட்டம் ஒழுங்கு குறித்து பாஜக விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments