பிளஸ் 2 தேர்வு: முதல்முறையாக மாணவர்களுக்கு கால்குலேட்டர் அனுமதி..!

Mahendran
செவ்வாய், 4 நவம்பர் 2025 (11:53 IST)
மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடைபெறும் பிளஸ் 2 பொதுத் தேர்வில், கணக்குப்பதிவியல் (Accountancy) பாடத்துக்கு தேர்வு அறையில் முதல் முறையாக கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார். மாணவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.
 
சென்னை தலைமை செயலகத்தில் இன்று பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ், இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
 
பிளஸ் 2 பொதுத் தேர்வில் கணக்குப்பதிவியல் பாடம் எழுதும் மாணவர்கள், கணக்கீடுகளை செய்ய முதன்முறையாக கால்குலேட்டரை பயன்படுத்த அனுமதிக்கப்படுவர். இது இப்பாட மாணவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
 
"மாணவர்கள் பொதுத்தேர்வை அச்சமின்றி எழுத வேண்டும். இது மாணவர்களுக்கான தேர்வு மட்டுமல்ல, ஆசிரியர்களுக்கான தேர்வும் கூட. மகிழ்ச்சியாக தேர்வுக்கு தயாராகுங்கள்," என்று அவர் அறிவுறுத்தினார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு! ரிசல்ட் எப்போது? - முழு விவரம்!

அதிமுகவுக்கு இரட்டை இலையை கொடுக்காதீங்க! தேர்தல் ஆணையத்திற்கு செங்கோட்டையன் கடிதம்!

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு ரூ.30,000.. இலவச மின்சாரம் - தேஜஸ்வி யாதவ் வாக்குறுதிகள்

மோடியின் சோட்டா பாய் தான் தேஜஸ்வி யாதவ்.. ஒவைசி கடும் விமர்சனம்..!

40 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்தியர் நாடு கடத்தப்படுகிறாரா? அமெரிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments