Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி செய்யப்படுகிறதா?

Webdunia
புதன், 14 ஜூன் 2023 (12:17 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிற தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. 
 
நேற்று நள்ளிரவு அமலாக்கத்துறை அதிகாரிகளால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில் திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனை அடுத்து சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நலம் குறித்து தீவிரமாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ரத்தக்குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும் இது ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாகவும் ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
 
மேலும் அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இது குறித்த மேலும் தகவல்களை விரைவில் ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments