Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவசர அவசரமாக சென்னை வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி.. பரபரப்பு தகவல்..!

Webdunia
புதன், 14 ஜூன் 2023 (12:13 IST)
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று இரவு அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 
 
இந்த நிலையில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட விபரத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று நள்ளிரவில் அவரது மனைவி மேகலா அவர்களிடம் கூறியதாகவும் இதனை அடுத்து செந்தில் பாலாஜி மனைவி இன்று காலை கரூரில் இருந்து புறப்பட்டு சென்னை வந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருடன் செந்தில் பாலாஜியின் சகோதரரும் வருவதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் சென்னை வந்தவுடன் செந்தில் பாலாஜியை அவரது மனைவி சந்தித்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் செந்தில் பாலாஜி மனைவி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வார் என்று கூறப்படும் நிலையில் அது எந்த விதமான மனுவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments