Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மகனின் நண்பர்கள் என்று கூறி வீட்டுக்குள் நுழைந்து ரூ.16 லட்சம் நகை-பணம் கொள்ளை

மகனின் நண்பர்கள் என்று கூறி வீட்டுக்குள் நுழைந்து ரூ.16 லட்சம் நகை-பணம் கொள்ளை
, புதன், 6 ஜூலை 2016 (12:34 IST)
சென்னை, சூளை குருதேவ் பேலஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பில், ராஜேஷ்குமார் (48) என்ற தொழிலதிபர் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.


 


மூத்தமகன் லயோலா கல்லூரியில் பட்டப்படிப்பு படிக்கிறார். இந்நிலையில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் ராஜேஷ்குமாரின் மனைவியும் அவரது தாயாரும் வீட்டில் தனியாக இருந்தனர். அப்போது மூத்த மகனோடு நண்பர்கள் என்று 3 வாலிபர்கள் உள்ளே நுழைந்தனர். பிறகு வீட்டின் கதவை பூட்டி ராஜேஷ்குமாரின் மனைவி மற்றும் தாயாரை கத்தியைக்காட்டி மிரட்டி, வாயில் துணியை அமுக்கி, கயிற்றால் இருவரையும் கட்டிப்போட்டு பீரோவில் இருந்த ரூ 10 லட்சம் மதிப்புள்ள தங்கநகைகளையும், ரூ 6 லட்சத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து வேப்பேரி காவல்துறையினர் கொள்ளையர்களின் கைரேகையை கைபற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர்.  மேலும் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மனைவி காதலனின் ஆணுறுப்பை துண்டித்த குத்துச்சண்டை வீரர்