Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மார்ச் 24 வரை பட்ஜெட் கூட்டத்தொடர்!!

மார்ச் 24 வரை பட்ஜெட் கூட்டத்தொடர்!!
, வெள்ளி, 18 மார்ச் 2022 (12:44 IST)
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் 24 ஆம் தேதி வரை நடைபெறும் அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

 
தமிழக அரசின் 2022-23ம் ஆண்டிற்கான ஆண்டு பட்ஜெட் இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராகன் பட்ஜெட் உரையை வாசித்தார். இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 
 
இதனைத்தொடர்ந்து நாளை தமிழக சட்டப்பேரவையில் நாளை வேளாண்துறைக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதன் பின்னர் வரும் திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் என அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. 
 
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் 24 ஆம் தேதி வரை நடைபெறும் அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. பட்ஜெட் மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 24 ஆம் தேதி பதில் அளிக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகளிருக்கு மாதம் ரூ.1000 திட்டம் என்னாச்சு?? – நிதியமைச்சர் பதில்!