Publish Date: Sun, 07 Nov 2021 (12:31 IST)
Updated Date: Sun, 07 Nov 2021 (12:34 IST)
குடியிருப்பு பகுதிகளில் மழைநீர்: மேம்பாலத்தில் நிறுத்தப்படும் கார்கள்!
சென்னையில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்து உள்ளதால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை மேம்பாலத்தில் பொதுமக்கள் நிறுத்தி வருகின்றனர்.
2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் சென்னையில் இருபத்தி மூன்று சென்டிமீட்டர் மழை பெயததை அடுத்து ஆறு ஆண்டுகள் கழித்து நேற்று தான் 23 செமீ பெய்து உள்ளது இதன் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது
இந்த நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டின் அனுபவத்தைப் பொறுத்து இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை மேம்பாலத்தில் இருந்து வருகின்றனர். இதனால் மேம்பாலத்தின் ஒரு பகுதி முழுவதும் கார் பார்க்கிங் ஆக காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
2015 ஆம் ஆண்டு வெள்ளத்தில் பல வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன என்பதும் பல வாகனங்களில் தண்ணீர் புகுந்து ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது