Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திபாவளிக்கு புதுசட்டை வாங்கித் தர மறுத்த தந்தை… சிறுவன் தற்கொலை!

Webdunia
வெள்ளி, 13 நவம்பர் 2020 (16:44 IST)
திருவள்ளூர் மாவட்டத்தில் தீபாவளிக்கு புதுசட்டை வாங்கித் தர மறுத்ததால் சிறுவன் ஒருவன் தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் கரிக்கலவாக்கம் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. இவருக்கு சுனில் என்ற மகன் உள்ளார். 10 ஆம் வகுப்பு படித்துமுடித்துவிட்டு அதன் பின்னர் மேலே படிக்காமல் கூலி வேலைக்கு செல்ல ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில் சுனில் தந்தை பாலாஜியிடம் தீபாவளி பண்டிகையை கொண்டாட புது சட்டை வாங்கி தரும்படி கேட்டுள்ளார். அதற்கு பாலாஜி தீபாவளிக்கு முந்தைய நாள் வாங்கி தருகிறேன் எனக் கூற அதிருப்தி அடைந்த சுனில் வீட்டில் யாரும் இல்லாத நேரமாக பார்த்து தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அவரது உடலை மீட்ட போலீஸார் பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments