Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூரில் 15 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Sivakumar
Webdunia
வெள்ளி, 1 டிசம்பர் 2023 (12:27 IST)
கர்நாடகம் மாநிலத்தில் உள்ள 15 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கர்நாடகம் மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி  நடந்து வருகிறது.
 
இங்கு பெங்களூரில் உள்ள 15 பள்ளிகளுக்கு  வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.  அதாவது, இமெயில் மூலம் மர்ம நபர் இப்பள்ளிகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். 
 
இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.
 
விரைந்து பள்ளிக் கூடத்திற்குச் சென்ற போலீஸார் பள்ளியில் இருந்து  மாணவ, மாணவியரை வெளியேற்றி, சோதனை நடத்தினர்.  
 
இச்சோதனையில் இந்த வெடிகுண்டு மிரட்டல் போலியானது என கண்டுபிடித்தனர்.
 
மேலும், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளில் ஒன்று  அம்மாநில துணை முதல்வர்  டி.கே.சிவக்குமாரின் வீட்டிற்கு எதிரே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வெடித்த குப்பைத்தொட்டி.. வீசியெறியப்பட்ட தொழிலாளி பரிதாப பலி! - என்ன நடந்தது?

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments