Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னைக்கு வரும் 11 விமானங்களில் வெடிகுண்டு: இமெயில் வந்ததால் பரபரப்பு..!

Siva
வியாழன், 31 அக்டோபர் 2024 (08:31 IST)
சென்னைக்கு வரும் 11 விமானங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என மின்னஞ்சல் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
சென்னை விமான நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு வந்த மின்னஞ்சலில் இலங்கை, மும்பை, பெங்களூரு, சிலிகுரி, டெல்லி, கொல்கத்தா, கோவா, புனே, ஹைதராபாத் உள்ளிட்ட 11 நகரங்களில் இருந்து வரும் விமானங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
இதை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய்களுடன் விமான நிலையம் முழுவதும் சோதனை செய்து வருகிறார்கள். ஒவ்வொரு விமானமும் தரையிறங்கியதும், பயணிகள் வெளியேறிய பிறகு விமானம் முழுவதும் சோதனை செய்யப்படுகிறது. 
 
இதுவரை எந்த விமானத்திலும் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், வழக்கம்போல இந்த மின்னஞ்சல் புரளியாகவே இருக்கலாம் என அதிகாரிகள் உறுதியாக கூறுகின்றனர். சில நாட்களுக்கு முன்பும் சென்னை விமான நிலையத்திற்கு இதேபோன்ற வெடிகுண்டு மின்னஞ்சல் வந்தது, அது புரளி என்பது உறுதிசெய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments