Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேலம், தஞ்சை, கோவையிலும் பரவும் கருப்பு பூஞ்சை: மக்கள் அச்சம்

Webdunia
ஞாயிறு, 23 மே 2021 (09:04 IST)
தமிழகத்தில் ஒரு பக்கம் கொரோனா வைரஸ் பொது மக்களை பயமுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் கருப்பு பூஞ்சை என்ற புதிய நோய் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே சென்னை மதுரை உள்ளிட்ட ஒரு சில நகரங்களில் கருப்பு பூஞ்சை தொற்று பாதித்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது கோவை சேலம் தஞ்சை உள்ளிட்ட பகுதிகளிலும் கருப்பு பூஞ்சை பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
கோவை மாவட்டத்தில் மட்டும் ஆறு பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் நாகராஜன் தெரிவித்துள்ளார். அதேபோல் தஞ்சை மாவட்டத்தில் ஒரு பெண் உள்பட 5 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தற்போது ஐந்து பேரும் சிகிச்சை பெற்று நலமாக இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது
 
மேலும் சேலம் மாவட்டத்தில் இதுவரை 5 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்தி தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments