Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

3 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது: தமிழிசை அறிவிப்பு!

3 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது: தமிழிசை அறிவிப்பு!

3 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது: தமிழிசை அறிவிப்பு!
, வியாழன், 27 அக்டோபர் 2016 (11:12 IST)
தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் வரும் நவம்பர் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த இடைத்தேர்தலில் பாஜக 3 தொகுதிகளிலும் போட்டியிடும் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.


 
 
தஞ்சாவூரில் கட்சி அலுவலகம் கட்ட பூமி பூஜையில் கலந்து கொள்ள சென்ற தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விவசாயிகளின் நலன் கருதி வர இருக்கும் இடைத்தேர்தலில் பாஜக 3 தொகுதிகளிலும் போட்டியிடும் என கூறினார்.
 
மேலும் இந்த தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் பட்டியல் இன்று அல்லது நாளை வெளியாகும் என கூறினார். காவிரி விவகாரத்தில் கர்நாடக முதல்வரிடம் ராகுல் காந்தி பேசி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட திருநாவுக்கரசர் வலியுறுத்த வேண்டும் என்றார் தமிழிசை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெட் ஏர்வேஸ்: சென்னை - கோயம்பத்தூர் ரூ.921 மட்டுமே!!