என்ஆர்.காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்க பாஜக சதி?

Webdunia
புதன், 29 செப்டம்பர் 2021 (11:42 IST)
என்ஆர்.காங்கிரசை கவிழ்த்து ஆட்சியை கவிழ்த்து பாஜக ஆட்சி அமைக்கும் தருணத்துக்கு காத்திருக்கிறது என ஏ.வி.சுப்ரமணியன் பேச்சு. 

 
காங்கிரஸ் திட்டங்களைத்தான் இப்போது என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி செயல்படுத்தியுள்ளது. புதுவையில் தற்போதும் கவர்னர் மூலம் மறைமுகமாக பாஜக ஆட்சி செய்வதாகவே கருத வேண்டியுள்ளது.
 
ஏனெனில் பாஜகவை பொறுத்தவரை மக்களை நேரடியாக சந்தித்து ஓட்டு கேட்டு வெற்றி பெற மாட்டார்கள். அதற்கு பதிலாக ஆள் பிடிக்கும் வேலை, கவர்னர் மூலமாக அதிகாரத்தை கைப்பற்றுவதையே செய்வார்கள். இந்த ஆட்சியிலும் இது தொடர்கிறது. 
 
கடந்த 5 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் நாங்கள் போராடினோம். இப்போதைய ஆட்சி கவர்னரிடம் சரணடைந்துள்ளது. ஓடு மீன் ஓட உறுமீன் வர காத்திருக்குமாம் கொக்கு என்பது போல என்ஆர்.காங்கிரசை கவிழ்த்து ஆட்சியை கவிழ்த்து பாஜக ஆட்சி அமைக்கும் தருணத்துக்கு காத்திருக்கிறது என புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

திருப்பரங்குன்றம் மலை தீபம் சர்ச்சை: தர்கா அருகே தீபம் ஏற்றும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!

விஜயின் ரோட் ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுப்பு!...

20 நிமிடங்களில் முறிந்த திருமணம்: மணமகள் மறுத்ததால் ஊர் பஞ்சாயத்தில் விவாகரத்து!

பாஜக வேட்பாளராக போட்டியிடும் சோனியா காந்தி.. தமிழில் அடித்த போஸ்டரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments