Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது.. அண்ணாமலை அறிவிப்பு..!

Mahendran
சனி, 1 மார்ச் 2025 (17:15 IST)
முதலமைச்சர் முக ஸ்டாலின்  தலைமையில் மார்ச் 5ஆம் தேதி நடைபெற உள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 
இந்த கூட்டத்தில் ஏன் பங்கேற்கவில்லை என்பதற்கான காரணங்களையும், அவர் முதலமைச்சருக்கு கடிதம் மூலம் எழுதி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மார்ச் 5ஆம் தேதி தமிழக முழுவதும் மும்மொழிக் கொள்கையை ஆதரித்து பாஜக சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
தொகுதி மறு வரையறை விகிதச்சார அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள தொகுதிகள் குறைக்கப்படாது என அமைச்சர் அமித்ஷா கூறியுள்ள போதிலும், இந்த அனைத்து கட்சி கூட்டம் ஒரு நாடகம் என்றும், இந்தி திணிப்பு நாடகத்தை மக்கள் ஏற்க மறுத்ததால் வேண்டுமென்றே வேறொரு பிரச்சனையை முதல்வர் கையில் எடுத்துள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
மேலும், மத்திய அரசு நிதி அளிக்கவில்லை என இன்னும் எவ்வளவு காலம் தான் பொய்களை பரப்ப முடியும் என்றும் அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments