Publish Date: Thu, 03 Feb 2022 (15:11 IST)
Updated Date: Thu, 03 Feb 2022 (15:15 IST)
தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்கள் நடத்தும் போராட்டட்திற்கு பாஜக ஆதரவு அளிக்கும் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: கொரோனாவால் உயிரிழந்த 9 மருத்துவர்களுக்கும் மத்திய அரசு ரூ.50 லட்சம் நிவாரரணம் வழங்கியுள்ளது. ஆனால் தமிழக அரசின் ரூ.25 லட்சம் நிவாரணம் எங்கே எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், வரும் 10 ஆம் தேதி தமிழகத்தில் மருத்துவர்கள் நடத்தும் போராட்டத்திற்கு பாஜக ஆதரவு அளிக்கும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.