Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஸ்லாமியர்கள் திசை திருப்பப்படுகிறார்கள்..பாஜகவினர் பேரணி

Arun Prasath
வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (17:34 IST)
தமிழகத்தில் சிஏஏவுக்கு எதிராக இஸ்லாமியர்கள் திசை திருப்பப்படுகின்றனர் என கூறி கண்டனம் தெரிவித்து பாஜகவினர் பேரணியில் ஈடுபட்டனர்.

ஒரு புறம் சிஏஏவிற்கு எதிராக பலரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மறுபுறம் பாஜகவினர் சிஏஏவை ஆதரித்து பேரணிகள் நடத்தி வருகின்றனர். இதனிடையே டெல்லியில் இரு தரப்பினரிடையே வெடித்த வன்முறையில் 35 பேர் பலியாகினர். மேலும் இஸ்லாமியர்களின் மசூதி ஒன்று சேதப்படுத்தப்பட்டது. மேலும் அப்பகுதியில் உள்ள இஸ்லாமியர்களின் வீடுகளும் கடைகளும் நொறுக்கப்பட்டது.

அதே போல் தமிழகத்தில் சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் சிஏஏவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைக்க முயன்றதில் பலர் காயமடைந்தனர். இந்நிலையில் தமிழகத்தின் சென்னை, திருச்சி, நெல்லை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் சிஏஏவுக்கு எதிராக இஸ்லாமியர்கள் திசை திருப்பப்படுகிறார்கள் எனக் கூறி கண்டனம் தெரிவித்து பாஜகவினர் பேரணி நடத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments