விஜய்க்கு தனி விமானம் வாங்கி கொடுத்ததே பாஜக தான்.. சபாநாயகர் அப்பாவு

Siva
புதன், 16 ஜூலை 2025 (08:05 IST)
விஜய்க்கு தனி விமானம் வாங்கிக் கொடுத்ததே பா.ஜ.க.தான் என்றும், அவர் பா.ஜ.க.வின் ஆள் தான் என்றும்" சபாநாயகர் அப்பாவு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தை திருநெல்வேலியில் தொடங்கி வைத்த சபாநாயகர் அப்பாவு, அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "விஜய்யின் மூன்று நிமிடப் பேச்சை கேட்டேன். ஜெயராஜ் பென்னிக்ஸ் வழக்கில் இறந்தவர் பெயரைக்கூட சரியாகச் சொல்ல தெரியவில்லை. யார் வசனம் எழுதி கொடுத்து அவர் பேசுகிறார் என்று தெரியவில்லை.

அஜித்குமார் வழக்கு விஷயத்தில் சம்பந்தப்பட்ட அத்தனை பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வரே அந்த குடும்பத்திடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார். அப்படி இருக்க, விஜய் யார் சொல்லி இப்படி பேசுகிறார் என்று தெரியவில்லை" என்றார்.
 
மேலும், "புஸ்ஸி ஆனந்த் பாண்டிச்சேரியில் அரசியல் செய்யும்போது, அவருக்கு அமித்ஷாவுடன் தொடர்பு கொண்டு, விஜய் கேட்காமலே அவருக்கு ஒய்-பிரிவு பாதுகாப்பை கொடுத்திருக்கிறார்கள். அவருக்கு தனி விமானம் வாங்கிக் கொடுத்தது பா.ஜ.க.தான். விஜய்யின் அம்மா கிறிஸ்துவர். சிறுபான்மையினர் வாக்கை உடைக்கத்தான் அவரை பா.ஜ.க. களத்தில் இறக்கி இருக்கிறது" என்றும் அப்பாவு கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments