Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓபிஎஸ் வீட்டிற்கு வண்டி விட்ட பாஜக நிர்வாகிகள்!

Webdunia
வியாழன், 23 ஜூன் 2022 (15:32 IST)
எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசிய நிலையில் தற்போது ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு பாஜக நிர்வாகிகள் வருகை தந்துள்ளனர். 

 
அதிமுக ஒற்றைத் தலைமை குறித்து அதிமுகவிற்குள் சர்ச்சை நிலவி வரும் நிலையில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் கூடியது. ஆனால் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இரு தரப்பினர் இடையேயும் கூச்சல், குழப்பம் நிலவியதால் தொடங்கிய சில மணி நேரத்தில் முடிவடைந்தது.
 
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியை பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை நேரில் அவரது இல்லத்தில் சென்று சந்தித்துள்ளார். நடைபெற உள்ள குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பது குறித்து பேசுவதற்காக அண்ணாமலை சென்றுள்ளதாக தகவல்கள் வெளியானது. 
 
இதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசிய நிலையில் தற்போது ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு பாஜக நிர்வாகிகள் வருகை தந்துள்ளனர். பாஜக நிர்வாகிகள் அண்ணாமலை, கரு.நாகராஜன், சி.டி.ரவி ஆகியோர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை கீரீன்வேஸ் சாலை இல்லத்துக்கு சென்றுள்ளனர். குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு சந்திப்பு என தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments