Publish Date: Fri, 12 Mar 2021 (11:24 IST)
Updated Date: Fri, 12 Mar 2021 (11:59 IST)
அதிமுகவை வைத்து பாஜக ஆட்சியை பிடிக்க நினைக்கிறதா என எழுப்பட்ட கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதில்.
தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது சமீபத்திய பேட்டியில் அதிமுகவை வைத்து பாஜக ஆட்சியை பிடிக்க நினைக்கிறதா என எழுப்பட்ட கேள்விக்கு பதில் அளித்தார்.
அதாவது, பாஜக எங்களுடன் இணைந்து ஆட்சியை பிடிக்க நினைப்பதாக கூறுவது தவறு. பாஜக, திமுகவுடன் கூட்டணி வைத்தால் சரி, ஆனால் அதுவே அதிமுக கூட்டணி வைத்தால் தவறு என சொல்வதா? தேர்தலுக்காக மட்டுமே பாஜகவுடன் அதிமுக கூட்டணியே தவிர சிந்தாந்த அடிப்படையில் இல்லை.