Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.எஸ் அமைப்பின் பயங்கரவாத நகரமாகிறது கோவை..? – அண்ணாமலை விமர்சனம்!

Webdunia
செவ்வாய், 25 அக்டோபர் 2022 (13:05 IST)
கோவையில் கார் வெடித்த விபத்து குறித்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

கோவையில் கார் வெடித்து முபீன் என்ற நபர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இது தீவிரவாத சதி செயலாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நேரடியாக கோவை சென்று ஆய்வுகளை மேற்கொண்டார். இந்நிலையில் இந்த கார் வெடிப்பு சம்பவம் குறித்து எதிர்கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து விமர்சித்து பேசியுள்ள பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, கோவை ஐ.எஸ் அமைப்பின் தாக்குதல் இலக்காக மாறி வருவதாக கூறியுள்ளார். மேலும் காவல்துறை சில விஷயங்களை மக்களிடம் மறைப்பதாக கூறியுள்ள அவர், இதுகுறித்து தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Edited By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments