Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

போலீஸுக்கும் கொடுங்க: மெரீனாவில் கலவரத்துக்கு முன்

போலீஸுக்கும் கொடுங்க: மெரீனாவில் கலவரத்துக்கு முன்
, திங்கள், 23 ஜனவரி 2017 (19:21 IST)
மெரீனாவில் காவல்துறையினர் போராட்டக்காரர்களை விரட்டி அடிக்கும் முன் மைக் மூலம் கூறிய கடைசி வார்த்தை, போலீஸுக்கு டீ, பிஸ்கெட் வேணுமாம், யாராவது கொண்டு போய் கொண்டுங்கப்பா என்பது தான் என்று கூறப்படுகிறது.


 

 
கடந்த 6 நாட்களாக ஜல்லிக்கட்டு நிரந்தர சட்டம் கோரி போராடி வந்த போராட்டக்காரர்களை காவல்துறையினர் இன்று அடித்து விரட்டினர். நேற்று இரவு சுமார் 8 மணி அளவு முதலே காவல்துறையினர் குழு குழுவாக மெரீனாவுக்குள் புகுந்தனர். 
 
இதையடுத்து இன்று காலை கலவரம் நடப்பதற்கு முன் போராட்ட கோசங்களுக்கு இடையே போலீஸுக்கு டீ, பிஸ்கெட் வேணுமாம், யாராவது கொண்டுபோய் கொண்டுங்கப்பா என்று மைக் மூலம் கடைசிய கூறப்பட்டுள்ளது. பின்னர் காவல்துறையினர் அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறி அங்குள்ள இளைஞர்களை அடித்து விரட்டியுள்ளனர். 
 
நொடியில் கலவரத்தை ஏற்படுத்தி அறவழி போராட்டம் நடந்த மெரீனாவை கலவர மெரீனாவாக மாற்றியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’யார் கூறியும் கலையாத போராட்டக்காரர்கள்’ - மெரீனாவில் பரபரப்பு!