Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்செந்தூர் கடலில் சீற்றம்.. பக்தர்கள் குளிக்க தடை.. கோயில் நிர்வாகம் நடவடிக்கை..!

Siva
ஞாயிறு, 5 மே 2024 (14:46 IST)
கடல் சீற்றம் காரணமாக, திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்க தடை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடலில் அலையின் வேகம் மிக அதிகமாக இருப்பதால், கோயில் நிர்வாகம் சார்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
கடலில் யாரும் குளிக்க கூடாது என ஒலிபெருக்கி மூலம் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். 
கோடை விடுமுறை, ஞாயிற்று கிழமை என்பதால் திருச்செந்தூர் கோயிலில் குவியும் பக்தர்கள் இதனால் ஏமாற்றம் அடைந்து தங்களது அதிருப்திகளை தெரிவித்து வருகின்றனர்.
 
பக்தர்கள் அதிகளவில் குவிந்துள்ள நிலையில், கடலில் புனித நீராட தடை விதித்துள்ளதால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
 
அதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை சுற்றுலா தலங்களில் கடலில் பொதுமக்கள் இறங்க வேண்டாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக கடலோர பகுதிகளில் கடல் சீற்றம், கடல் கொந்தளிப்பு அதிகமாக இருக்கும் மற்றும் பேரலைகள் எழக்கூடும் என தேசிய பேரிடர் மேலாண்மை ஆராய்ச்சி  மையம்  எச்சரிக்கையை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானை இந்தியா கைப்பற்றும் லாகூர் ‘லவ் நகர்’ ஆகும்.. கராச்சி ‘நியூ காசி’ ஆகும்: மார்க்கண்டேய கட்சு

விடிய விடிய பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல்.. பதுங்கு குழியில் ஜம்மு மக்கள்..!

நிதி கொடுத்து உதவுங்கள்.. உலக வங்கியிடம் கெஞ்சும் பாகிஸ்தான் அரசு..!

அடுத்த அட்டாக் ஆரம்பமா? 26 போர்க்கப்பல்கள் தயார் நிலையில் இருக்க உத்தரவு

பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலை தடுத்த இந்திய ராணுவம்.. வீடியோ வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments