Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் நவம்பர் 20ஆம் தேதி வரை கனமழை பெய்யும்: பாலச்சந்திரன் தகவல்..!

Webdunia
புதன், 15 நவம்பர் 2023 (10:47 IST)
தென்கிழக்கு வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மற்றும்  காற்றின் வேக மாறுபாடு காரணமாக நவம்பர் 17ஆம் தேதி முதல்  நவம்பர் 20ஆம் தேதி வரை தமிழ்நாடு புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும் என தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.  
 
தென்கிழக்கு வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒரிசா கடலோர பகுதியை நோக்கி செல்லும் என்றும் இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.  
 
மேலும் தமிழக கடற்கரை ஓர பகுதிகளில் 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில்  காற்று வீசும் என்பதால் நவம்பர் 18 வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.  
 
மேலும் சென்னையில் மழை தொடரும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்றும் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று பாலச்சந்திரன் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜீப்லி புகைப்படம் உருவாக்குகிறீர்களா? காவல்துறையின் முக்கிய எச்சரிக்கை..!

வக்பு மசோதா நிறைவேற்றம்.. அடுத்த டார்கெட் கிறிஸ்துவர்கள் தான்: ராகுல் காந்தி

இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் விடுதலையா? இலங்கை அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை..!

இனி எந்த கோர்ட்டுக்கு போனாலும் செல்லாது: வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments