Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம்

Webdunia
புதன், 15 நவம்பர் 2023 (10:40 IST)
வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தோன்றியுள்ள நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுவது எப்போது என்பது குறித்த தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  
 
தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்க கடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு சற்று முன்னர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக்கி உள்ளது. 
 
இது அடுத்த ஆறு மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்ற உடன் வடமேற்கு திசையில் நடந்து மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில்  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலாக வலுபெறும் என்றும்  கூறப்படுகிறது. 
 
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாடு ஆந்திரா ஒடிசா கடற்கரை பகுதிகளில் மிதமான மழை முதல் கன மழை வரையும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவுக்கு வேண்டப்பட்டவர்கள் பயனடையும் திட்டங்கள்: பட்ஜெட் குறித்து அண்ணாமலை

எல்லோர்க்கும் எல்லாம் என்ற உயரிய நோக்கில் தமிழ்நாடு பட்ஜெட்: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 10,000 தான். எப்படி 40,000 நிரப்ப முடியும்? ஈபிஎஸ் கேள்வி

ஜவாஹிருல்லாவிற்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு..!

தி.மு.க. அரசு கடன் வாங்குவதில் சளைத்தது அல்ல: பட்ஜெட் குறித்து ஈபிஎஸ் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments