Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குடும்பக்கட்டுப்பாடு செய்த பெண்ணுக்கு குழந்தை.. மாதம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்த நீதிமன்றம்..!

குடும்பக்கட்டுப்பாடு செய்த பெண்ணுக்கு குழந்தை.. மாதம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்த நீதிமன்றம்..!
, செவ்வாய், 7 நவம்பர் 2023 (13:55 IST)
குடும்ப கட்டுப்பாடு செய்த பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளதை அடுத்து அந்த குழந்தை 21 வயது ஆகும் வரை மாதம் பத்தாயிரம் அபராதமாக செலுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த ராக்கு என்பவர் தனது மனைவி குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் மீண்டும் அவர் கருத்தரித்துள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். 
 
இந்த வழக்கு விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பில் மனுதாரருக்கு பிறக்கப்போகும் குழந்தைக்கு தேவையான கல்வி மற்றும் அனைத்து ஏற்பாடுகளையும் அரசு செய்ய வேண்டும் என்றும் அந்த குழந்தை 21 வயது நிறைவடையும் வரை ஆண்டுக்கு ரூபாய் 1.20 லட்சம் அதாவது மாதம் 10 ஆயிரம் அரசு வழங்க வேண்டும் என்றும்  நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்த 3 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!