நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு – தந்தையின் ஜாமீன் மனு தள்ளுபடி !

Webdunia
புதன், 9 அக்டோபர் 2019 (15:36 IST)
நீட் ஆள்மாறாட்ட வழக்கில் சிக்கியுள்ள மாணவன் உதித் சூர்யாவின் தந்தையின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சீப் மெடிக்கல் ஆபீஸராகப் பணியாற்றி வந்த வெங்கடேசனின் மகன் உதித் சூர்யா. இவர் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார். இது சம்மந்தமாக அந்த மருத்துவ கல்லூரி டீன் அளித்த புகாரின் பேரில்  போலிஸார் மாணவர் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதன் பின்னர் நடந்த விசாரணையில் மேலும் சிலர் ஆள்மாறாட்டம் செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசன் ஜாமீன் கேட்டு தேனி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இன்று விசாரணைக்கு வந்த அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு அவரை மீண்டும் சிபிசிஐடி காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

SIR-ஐ ஏன் எதிர்க்கிறோம்? முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் விளக்கம்!

41 பேர் இறப்பிற்கு காரணமாக இருந்தவர் விஜய்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி..!

SIR திருத்தத்துக்கு எதிராக திமுக ஆர்ப்பாட்டம்: தேதியை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்..!

தேர்தல் பிரச்சாரமா? உல்லாச சுற்றுப்பயணமா? ராகுல் காந்தியை கிண்டல் செய்த பாஜக..!

பாதுகாப்பு பயிற்சியின்போது கிராமம் அருகே ஏவுகணை: ராஜஸ்தானில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments