Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

”விடுதலை புலிகள் தான் தமிழர்களை கொன்றது” சீமானுக்கு பதிலடி தந்த காங்கிரஸ் தலைவர்

”விடுதலை புலிகள் தான் தமிழர்களை கொன்றது” சீமானுக்கு பதிலடி தந்த காங்கிரஸ் தலைவர்

Arun Prasath

, திங்கள், 14 அக்டோபர் 2019 (14:38 IST)
சிங்கள ராணுவத்தை விட பெரும்பாலான தமிழர்களை கொன்றது விடுதலை புலிகள் தான் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சீமானுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை குறித்து சர்ச்சையாக சீமான் பேசியதை தொடர்ந்து அவர் மீது தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசுதல், வன்முறையை தூண்டும் வகையில் பேசுதல் ஆகிய இரண்டு பிரிவுகளின்  கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
webdunia

மேலும், நாம் தமிழர் கட்சியின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். இந்த சர்ச்சை பேச்சுக்கு பதிலளித்த சீமான், ”இது போல் நான் பல வழக்குகளை சந்தித்துள்ளேன், எனக்கு இது ஒன்றுமே இல்லை” என கூறினார். மேலும் “காங்கிரஸார் எந்த பிரச்சனைக்கு போராடியுள்ளனர்? இதற்காகவாவது போராடுவது மகிழ்ச்சி, பிரபாகரனை முன்வைத்து தான் எனது அரசியல் பரப்புரைகள் இருக்கும்” எனவும் கூறினார்.
webdunia

இதனை தொடர்ந்து காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி சீமானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சிங்கள ராணுவத்தை விட விடுதலைப் புலிகள்தான் தமிழர்களை அதிகம் கொன்றது என கூறியுள்ளார். மேலும் ஜனநாயக வழியில் போராடினால் தான் வெற்றி கிடைக்கும் எனவும், ஆயுத போராட்டங்கள் நிலைக்காது எனவும் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறுத்தை குட்டி வாயில் செல்போனை திணித்த கொடுமை: இளைஞர்களை பிடித்து கொடுத்தால் 25000 பரிசு!