Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நில அபகரிப்பு வழக்கு – நீதிமன்றத்தில் ஆஜரான மு க அழகிரி !

Webdunia
புதன், 23 அக்டோபர் 2019 (18:33 IST)
மதுரை திருமங்கலத்தில் கோவிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்ரமித்ததாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் மு க அழகிரி இன்று ஆஜராகியுள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில் முன்னாள் கலைஞரின் மகன்களில் ஒருவரான மு க அழகிரிக்கு சொந்தமான தயா பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரி கட்டுவதற்காக அப்பகுதியில் இருக்கும் விநாயகர் கோயிலுக்கு சொந்தமான 44 சென்ட் நிலத்தை அழகிரி தரப்பு ஆக்கிரமித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து கடந்த 2014 ஆம் ஆண்டு இது சம்மந்தமாக அழகிரி மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் மீதான விசாரணை மதுரை முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் சம்மந்தப்பட்டவர்களான மு.க.அழகிரி, சதீஷ்குமார், ஆதிலெட்சுமி, சேதுராமன், சம்பத்குமார் உள்ளிட்ட 5 பேரும் இன்று ஆஜரானார்கள். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நவம்பர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

திமுகவில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள மு க அழகிரி இப்போது எந்த விதமான அரசியல் செயல்பாடுகளிலும் ஈடுபடாமல் இருந்து வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments